Monday 6th of May 2024 12:13:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
நீர்கொழும்பு: பல்நோக்கு கூட்டுறவு தலைமையலுவலக ஊழியர்கள் 38 பேருக்கு கொரோனா!

நீர்கொழும்பு: பல்நோக்கு கூட்டுறவு தலைமையலுவலக ஊழியர்கள் 38 பேருக்கு கொரோனா!


நீர்கொழும்பில் உள்ள பல் நோக்க கூட்டுறவு தலைமையலுவலக (CO-OP) ஊழியர்கள் 38 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல்நோக்கு கூட்டுறவு ஊழியர்கள் 140 பேரிடம் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் இன்று ஞாயிற்றுக் கிழமை வெளியாகிய நிலையிலேயே அவர்களில் 38 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12 பொது சந்தேக நபர்கள் இருப்பதாகவும், அவர்கள் மீது மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் தலைமை பொது சுகாதார ஆய்வாளர் என்.கே.யூ.கே குணரத்ன தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் இருந்து முன்னர் அடையாளம் காணப்பட்ட 05 நபர்களின் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நண்பர்களே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவார்.

நேற்றைய தினமும் நீர்கொழும்பு மாநகர பிரிவில் 45 பேருக்கு கொரோனத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் வசந்த சோலங்கா ஆராச்சி தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து இதுவரை, நீர்கொழும்பில் மொத்தம் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE